மின்கசிவால் நேர்ந்த சோகம்

by Staff / 14-11-2022 12:49:55pm
மின்கசிவால் நேர்ந்த சோகம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், சென்னை தியாகராயர் நகர் நாயர் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வேலைக்காக சேர்ந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர், கடையை திறக்க இரும்பு ஷட்டரை தொட்ட போது மின் கசிவு ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பரிதாபமாக பாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

Tags :

Share via