அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.-முதல்வர் நிவாரணம். 

by Editor / 04-05-2023 11:17:24pm
அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.-முதல்வர் நிவாரணம். 

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது எதிரே சென்னை நோக்கி வந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு ₹2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via