தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கல்லணைக் கால்வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கதிர்விடும் தருவாயில் உள்ள நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. உடனடியாக கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும், தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு அருகே விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tags :