மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 8 பேர் பலி

by Staff / 01-09-2023 03:55:08pm
மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 8 பேர் பலி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஆகஸ்ட் 29 முதல் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதி வந்த உள்ளுர் பாடலாசிரியர் எல்.எஸ்.மங்போய் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நடந்துவரும் வன்முறையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via