துப்பாக்கியுடன் சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய தந்தை மீது வழக்குப்பதிவு

by Staff / 17-09-2022 12:15:09pm
துப்பாக்கியுடன் சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய தந்தை மீது வழக்குப்பதிவு

தெருநாய்களிடம் இருந்து காப்பாற்ற மதரஸா மாணவர்களை துப்பாக்கியுடன் அழைத்துச் சென்ற தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காசர்கோடு பெக்கல் ஹதாத் நகரைச் சேர்ந்த சமீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஐபிசி 153 இன் கீழ் பேக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை, குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஏர் கன் உடன் சமீர் முன்னால் நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பேக்கல் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via