வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ. 561 கோடி வழங்கிய மத்திய அரசு

by Staff / 07-12-2023 04:05:43pm
வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ. 561 கோடி வழங்கிய மத்திய அரசு

புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர் மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து சற்றுநேரத்திற்கு முன் முதற்கட்டமாக ரூ.450 கோடியை மத்திய அரசு அனுப்பியது. அதனைத்தொடர்ந்து, தற்போது நகர்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.561.29 கோடி 2ஆவது தவணையை முன்கூட்டியே வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசு ரூ.1011.29 கோடி வழங்கியுள்ளது.

 

Tags :

Share via