தமிழ்நாடு அரசு 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

by Editor / 04-10-2024 12:02:56am
தமிழ்நாடு அரசு 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி முதல்வராக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி முதல்வராக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags : தமிழ்நாடு அரசு 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Share via

More stories

Logo