ரூ.100 கோடி மோசடி - நகை கடை உரிமையாளர் கைது
சேலம் வலசையூரைச் சேர்ந்த சபரி சங்கர் (35) என்பவர் தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நகைக் கடை நடத்தி வந்தார். அதன் மூலம், தீபாவளி சீட்டு நடத்தி மக்களிடம் பணம் வசூல் செய்து, கடந்தாண்டு தலைமறைவானார். இந்த சீட்டு நடத்தியதன் மூலம் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் இன்று (மே 29) சபரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தருமபுரி மற்றும் அரூரில் செயல்பட்டு வந்த SVS ஜூவல்லரி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
Tags :