எட்டயபுரம் அருகே  பயோ டீசல் கடத்தல்  - 40,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல்

by Admin / 16-07-2024 05:03:47pm
எட்டயபுரம் அருகே  பயோ டீசல் கடத்தல்  - 40,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல்

எட்டயபுரம் அருகே  பயோ டீசல் கடத்தல்  - 40,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல் செய்தும் 2 பேரை  பிடித்தும் போலிஸ்சார் விசாரணை..

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயாபுரம்  காவல் உதவி ஆய்வாளர் நீலகண்டன், தனிப்பிரிவு காவலர் செல்லச்சாமி தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது கீழ ஈரால் சர்வீஸ் சாலை வழியாக ஆந்திரா பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தனர்.அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் டேங்கர் லாரியில் ஏரி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இன்றி பயோடீசல் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது..

பயோடீசல் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது தெரிய வந்ததை எடுத்து எட்டயபுரம் போலீசார் டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட பயோ டீசலை பறிமுதல் செய்தும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பகதூர் , தூத்துக்குடி மாவட்டம் வடக்கு செமபுதூர்  பகுதியைச் சேர்ந்த அய்யனார் என இருவரையும்  பிடித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிமை பொருள் வழங்கல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி  அவர்களிடம் ஒப்படைத்தனர்.

எட்டயபுரம் அருகே  பயோ டீசல் கடத்தல்  - 40,000 லிட்டர் பயோ டீசலை பறிமுதல்
 

Tags :

Share via