சேலம்,குமரி,சிவகங்கை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் நாளை 27 ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால், நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.இதே போன்று நவம்பர் 1 ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால், அன்றும் மாவட்டத்திற்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : சேலம்,குமரி,சிவகங்கை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை