சென்னையில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.

by Editor / 26-10-2023 09:21:15am
சென்னையில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருகையால் சென்னையில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னை வரும் குடியரசு தலைவர் , கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு தங்குகிறார். முன்னதாக ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபடவுள்ளனர்.

 

Tags : சென்னையில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.

Share via