சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சிறைக்கு இருவரும் காயத்துடன் வந்தனர் சிறை காவலர் மாரிமுத்து

by Staff / 25-03-2022 05:27:43pm
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சிறைக்கு இருவரும் காயத்துடன் வந்தனர் சிறை காவலர் மாரிமுத்து

ஜெயராஜ்பென்னிக்ஸ்  இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி கிளை சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது காயத்துடன் தான் வந்ததாக சிறைக்காவலர் மாரிமுத்து சாட்சியமளித்துள்ளார்.

தந்தை மகன் இருவரும் காவல்துறையினரின் சித்திரவதைகள் உயிரிழந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கோவில்பட்டி சிறை காவலர் மாரிமுத்து சாட்சியம் அளித்தார் அப்போது ஜெயராஜ்  பென்னிக்ஸ்இருவரும் சாத்தான்குளத்தில் இருந்து கொண்டுவரும்போதே  காயமடைந்து இருந்ததாக தெரிவித்தார்.

சிறையிலிருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முத்துராஜ் செல்லத்துரை ஆகியோரை அடையாளம் காட்டினார் அதன்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடைபெற்றது இதையடுத்து அடுத்த கட்ட விசாரணை மார்ச் 29ஆம் நாள் தள்ளி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via