மடாதிபதியின் ஆபாச படம் - தற்கொலை

by Staff / 28-10-2022 12:02:45pm
 மடாதிபதியின் ஆபாச படம் - தற்கொலை

கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சுவாமி. இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள தனது அறையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மடாதிபதி அறையில் இருந்து 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும், சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், மடத்தை கைப்பற்ற சிலர் முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த சம்பவம் குறித்து குதூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மடாதிபதி அரை நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு இளம்பெண் அந்த ஆபாச படத்தை சேர்த்து சிலர் பசவலிங்க சுவாமியை மிரட்டி இருக்கலாம். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே மடாதிபதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தில் மடத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை மிரட்டி வருவதாக கூறியுள்ளார். இளம்பெண் ஒருவர் வீடியோ காலில் பேசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இளம்பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என்று போலீசாருக்கு தெரியவந்து உள்ள நிலையில், அவரது செல்போன் எண்ணும் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

 

Tags :

Share via