பாளையங்கோட்டையில் 200 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் கொள்ளை
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி இவர் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தக்காரர் இந்நிலையில் நேற்று சென்னை செல்ல வேண்டியிருந்ததால் வீட்டில் உள்ள பீரோவில் உள்ள பணத்தை எடுக்க பீரோவை திறந்து பார்க்கும்போது வீட்டு பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் காணவில்லை இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்
வீட்டில் கதவுகள் பூட்டு ஏதும் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதாக வந்த புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் நகை மற்றும் பணம் எப்போது திருடு போனது யார் எடுத்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரில் சுரேஷ் குமார் என்பவரது வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags :