விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

by Admin / 16-07-2024 05:01:13pm
விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றி விசாரணை

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைலி மற்றும் காக்கிச்சட்டை அணிந்து டிரைவர் போல் மாறுவேடத்தில் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் திடீர் சோதனையின் காரணமாக  பேரூராட்சி அலுவலகத்தின் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தம் வருகை தந்த பொதுமக்கள் திரும்பி செல்கின்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன்  மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பூட்டப்பட்ட அறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்த புரோக்கர்கள்  சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில் பல்வேறு முறைகேடுகள் மோசடிகள் நடைபெற்று இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து இரண்டு டீம் ஆக சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். 

ஆவணங்கள் இருப்பு அறையில் கணக்கில் வராத 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்ற பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை இரவு வரை தொடரும்.என தெரிவித்தனர்.

 

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
 

Tags :

Share via