வளைவில் வேகமாக திரும்புகையில் சரிந்து விழுந்து விபத்து... சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞர் புனலூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தார் சுடுகடா என்னும் பகுதியில் சாலையில் வளைவில் திரும்பும் போது ,கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் நிலை தடுமாறி சரிந்ததில் கீழே விழுந்த இளைஞர் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த சஞ்சீவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் மனதை பதற வைக்கின்றன.
Tags :