காப்பகத்தில் குழந்தைகளை அச்சுறுத்திய பேய். அதிர்ச்சி சம்பவம்

by Staff / 11-10-2022 04:40:26pm
காப்பகத்தில் குழந்தைகளை அச்சுறுத்திய பேய். அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அவர்களை காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில், அந்த காப்பகத்தில் உள்ள ஊழியர்கள், பேய் போன்ற வேடம் போட்டு கொண்டு, குழந்தைகளின் முன்னே சென்று அவர்களை பயமுறுத்தி உள்ளனர். அது விளையாட்டுக்காகவோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை.

காலையில் சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்து இருந்த குழந்தைகளையும் ஊழியர்கள் பயமுறுத்தி உள்ளனர். இதனால், குழந்தைகள் அச்சத்தில் அலறியபடி இருந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான சூழலில், சமூக ஊடகத்தில் அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காப்பக ஊழியர்கள் 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories