கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

by Staff / 15-10-2024 02:04:05pm
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார். சிங்காநல்லூர் அருகே வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இன்று (அக்., 15) நேரில் ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

Tags :

Share via