வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீச்சு

by Staff / 03-01-2023 03:51:21pm
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீச்சு

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹவுரா செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும், இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மால்டாவில் உள்ள குமார்கஞ்ச் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Tags :

Share via