கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

by Staff / 19-06-2024 02:23:53pm
கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர், "கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார், அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via