இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

by Staff / 15-10-2024 02:23:42pm
இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

'அதிமுக இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது. உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்' என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். களைகள் என சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது கட்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆண்டிற்குள் அதிமுக ஒன்றினையும் என பேசப்பட்டுவரும் நிலையில், இபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags :

Share via