பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

by Staff / 31-05-2023 01:23:17pm
பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

மேச்சேரி சாமராஜபேட்டையை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 44). இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு உடல் நிலை சீராகவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை அவருக்கு உடல் நல பாதிப்பு அதிகமானது. இதனால் மனவேதனை அடைந்த பத்மாவதி, வீட்டில் இருந்த தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரையை எடுத்து தின்றார். மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மாவதி பலியானார். இந்த தற்கொலை குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via