கீழடியில் 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

by Staff / 08-07-2023 11:28:16am
கீழடியில் 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கீழடியில் 9 குழிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தங்க அணிகலன் உட்பட 183 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் 4 அகழாய்வுக் குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவைக் கொண்டு அமைக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
 

Tags :

Share via