திண்டுக்கல் அருகே மகளை கர்ப்பமாகிய தந்தை கைது
திண்டுக்கல் அருகேயுள்ள உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயது நபர் கட்டிடவேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 13 வயதுடைய மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே அவரது தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துவந்துள்ளார். இதில் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.மகளிடம் விசாரித்தபோது தந்தையே இதற்கு காரணம் என அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி வழக்கு பதிவு செய்து மகளை கர்ப்பிணியாக்கிய கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags :