இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

by Editor / 15-07-2021 10:19:58am
இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது ஆகஸ்டு மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடர் தொடங்க இருப்பதை அடுத்து இந்திய அணி இங்கிலாந்து நாட்டிலேயேதங்கியிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளன. எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவர்கள் இருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது என்பதும், இதனை அடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 25ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும், 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதியும் 5வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும்.

 

Tags :

Share via