கொழும்புக்கு 100 டன் உரத்தை அனுப்பியது இந்தியா

by Editor / 07-11-2021 02:41:19pm
கொழும்புக்கு 100 டன் உரத்தை அனுப்பியது இந்தியா

 

இயற்கை உரம் தொடர்பாக இலங்கை- சீனா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியா 100 டன் உரம் வழங்கி இலங்கைக்கு உதவியுள்ளது.

இலங்கையில் ரசாயன உரங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு இயற்கை விவசாய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரங்களில் பாக்டீரியா தாக்குதல் இருப்பதை இலங்கை அரசு கண்டறிந்து அதை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் சீனா- இலங்கை இடையே மோதல் ஏற்பட்டது. சீனா பதிலுக்கு இலங்கை மக்கள் வங்கியை தடை செய்தது.

இந்த நிலையில் இந்தியாவிடமிருந்து நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இலங்கை அரசு கேட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு 100 டன் நானோ நைட்ரஜன் உரங்களை அனுப்பி வைத் துள்ளது.

இந்திய விமானப்படையின் 2 சரக்கு விமானங்கள் மூலம் இந்த உரங்கள் கொழும்புக்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. சி-17 ரக 2 விமானங்கள் மூலம் உரங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவும் இது பயன்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via