கோர விபத்து.. 4 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அருகே அரசுப்பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொண்டியில் இருந்து மதுரை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் சென்றபோது பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :