தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு 1,000 கட்டிடங்கள் பிரதமர் மோடிதகவல்.
இந்தியா முழுவதும் உள்ள லாரி மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு பிரதமர் மோடி நற்செய்தியை வழங்கியுள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ-2024 இல் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்., ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கட்டிடங்கள் கட்டப்படும் என்றார்.வாகனங்களை நிறுத்துமிடம், ஓய்வு அறைகளில் உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக 1,000 கட்டிடங்கள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் ஓட்டுநர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
Tags : தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு 1,000 கட்டிடங்கள் பிரதமர் மோடிதகவல்.