ரசத்தில் விழுந்து இளைஞர் பலி

by Staff / 30-04-2023 04:47:59pm
ரசத்தில் விழுந்து இளைஞர் பலி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரைச் சேர்ந்தவர்கள் வேணு - கவிதா தம்பதி. இவர்களது மூத்த மகன் சதீஷ்(20) மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஏப்.23-ந்தேதி உணவு பரிமாறும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது சமையலறையில் சூடாக வைக்கப்பட்டிருந்த ரசத்தில் சதீஷ் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சதீஷ் விழுந்து காயமடைந்த ரசம் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் பரிமாறிப்பட்டது என கூறப்படுகிறது.

 

Tags :

Share via