இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வாலிபர்

by Staff / 17-02-2024 12:04:13pm
இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வாலிபர்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தாக்கூர் கிராமத்திற்கு அருகே இந்திய எல்லைக்குள் நுழைந்தார். சர்வதேச எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் நுழைந்த பிறகு எல்லை வேலி அருகே அந்த நபரை BSF கைது செய்தது. அந்த நபர் தவறுதலாக வந்தாரா அல்லது வேண்டுமென்றே நாட்டுக்குள் நுழைந்தாரா என பிஎஸ்எஃப் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை ‌

 

Tags :

Share via