பழைய பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்

by Editor / 31-07-2022 05:40:44pm
பழைய பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூரில் பழைய பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விடுமுறை தினமான இன்று தொழிலாளர்கள் யாரும் வராத நிலையில் நிறுவனத்திலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் பல்லடம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via