திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

by Staff / 24-10-2024 12:23:21pm
திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

கோவையில் அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக இறங்கி ஓடியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via