.13 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

by Staff / 11-07-2024 11:36:11am
.13 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 விசைப்படகுகளை சிறை பிடித்தனர். இவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேருக்கு 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via