பொங்கல் விற்பனைக்காக சாராயபாட்டில்கள்,பாக்கெட்டுக்கள் பறிமுதல் 3 பேர் கைது.

by Editor / 13-01-2022 11:56:39am
பொங்கல் விற்பனைக்காக சாராயபாட்டில்கள்,பாக்கெட்டுக்கள் பறிமுதல்  3 பேர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட காலகஸ்தி நாதபுரம் -மாத்தூர் சாலையில் காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் பறிமுதல், காரில் வந்த மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு டிரைவர் ராஜ், மன்னம்பந்தலை சேர்ந்த சதீஷ், இருசக்கர வாகனத்தில் பைலட்டாக வந்த திருக்களாச்சேரி முருகேசன் ஆகிய மூவர் கைது.   பொங்கல் விடுமுறையில் விற்பனைக்காக கடத்தப்பட்டது. செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

 

Tags :

Share via