20-ஆண்டுகளாக கஞ்சா விற்றவர் 21-கிலோ கஞ்சாவுடன் கைது
அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அதில் இரண்டு கிலோ எடை வீதம் 10க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர் அதன் மொத்த எடை 21 கிலோ இருந்தது.போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர் மதுரை அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெரு சேர்ந்த கிருஷ்ணகுமார்(54) என்பது தெரியவந்தது.2003 ஆம் ஆண்டு வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த அவர் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடைக்குப் பிறகு 20 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் இறங்கிசரக்கு லாரியில் ஆந்திரா சென்று கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சில்லறையாக விற்பனை செய்து வந்து உள்ளார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.20 ஆண்டுகளாக மதுரையில் கஞ்சா விற்ற நபரை போலிசார் 21 கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர்.
Tags :