2 லட்சம் கால்நடைகள் பலி

by Staff / 28-01-2023 03:19:06pm
2 லட்சம் கால்நடைகள் பலி

ஆப்கானிஸ்தானில் கடும்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த பனிப்பொழிவால் கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிட்டுள்ளதாகவும், குளிர்ந்த காலநிலை மற்றும் புற்கள் பற்றாக்குறையால் கால்நடைகள் பலியாவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிரால் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via