டீ குடிக்க சென்றவரின் பைக் எரிந்த பரபரப்பு காட்சி
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி கடைக்கு டீ குடிப்பதற்காக ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பைக்கில் அவர் அமர்ந்திருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் தீ பிடித்து மளமளவென எரிந்தது. உடனே பதறிப்போன இளைஞர் இருசக்கர வாகனத்தை கீழே சாய்த்தார். அருகில் பேக்கரியில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து ஊற்றி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :