விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

by Staff / 21-03-2023 01:00:13pm
விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ₹14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், பனை சாகுபடியை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வாழைக்காக தனித் தொகுப்பு திட்டம் ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

 

Tags :

Share via