சாராயம் விற்ற பெண் கைது

by Staff / 21-03-2023 12:31:08pm
சாராயம் விற்ற பெண் கைது

மணல்மேடு பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாழஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி மனைவி ரீனா (42) என்பவரின் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 45 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்த போது, அங்கு 45 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 45 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via