நடிகர் வடிவேலு வழக்கு - சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Tags :