வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ. சி. எஃப். -ல் 2-ம் கட்டமைப்பு பணிகள்

by Staff / 21-03-2023 12:09:35pm
வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ. சி. எஃப். -ல் 2-ம் கட்டமைப்பு பணிகள்

வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்கும் வகையில், சென்னை ஐ. சி. எஃப். தொழிற்சாலையில் ரூ. 25. 50 கோடியில் 2-ம் கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.அதன்படி, வரும் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் தவிர, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ஆகிய இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐசிஎஃப்-ல் 2-வது கட்டமாக ரூ. 25. 50 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்படுத்த உள்ளது.

 

Tags :

Share via