மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி

by Staff / 29-09-2023 04:39:54pm
மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் பாலக்கரையில் வசித்து வருபவர் மாரி (வயது 58) இவர் கணபதி அக்ரகாரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு  கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு இப்பகுதியில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மாரி வீட்டின் பின்புறம் கட்டியிருந்த ஆடுகளின் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 ஆடுகள் மயங்கி விழுந்து  பரிதாபமாக இறந்து போனது. மேலும் மாரி வீட்டிலிருந்த டி. வி. உள்ளிட்ட மின்சான பொருட்களும் சேதம் அடைந்தது. இது பற்றி தகவலறிந்த கணபதி அக்ரகாரம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மாரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

 

Tags :

Share via