தொழிலதிபர் பீகாரில் கடத்தி 90 லட்சம் வழிப்பறி

by Staff / 22-04-2022 03:14:09pm
தொழிலதிபர் பீகாரில் கடத்தி 90 லட்சம் வழிப்பறி

ஆந்திர மாநிலம் திருப்பதி வருமானவரித்துறையினர் எனக்கூறி தொழிலதிபரின் பிஏவை  காரில் கடத்தி 90 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். நரசரோபெட்டை சேர்ந்த தொழிலதிபரான சதீஷ் கடந்த 9ஆம் தேதி தனது சகோதரியிடம் ஒப்படைக்க கூறிய அவரது பி ஏ சீனிவாஸ் என்பவரிடம் 90 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு சீனிவாஸ் பேருந்தில் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு பின்தொடர்ந்த மர்ம கும்பல் தங்கள் வருமான வரித்துறையினர் என்றும் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக்கூறி சீனிவாஸை காரில் ஏற்றி பணத்தை பறித்துக் கொண்டு காரிலிருந்து வெளியே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் வைத்து ஆந்திராவைச் சேர்ந்த அந்த எட்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 88 லட்ச ரூபாய் பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via