குழந்தைகளை கொன்று குவிக்கும் கொலைகார வைரஸ்

by Staff / 21-07-2024 12:26:28pm
குழந்தைகளை கொன்று குவிக்கும் கொலைகார வைரஸ்

குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சண்டிபுரா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து ஆலோசனை நடைபெற்றது.
குறிப்பாக, இந்த வைரஸ் மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், இதன் தாக்கம் சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories