குரூப் 2 தேர்வை ரத்து செய்க - இபிஎஸ்
குரூப் 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியதால் பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வு நடந்தன. தேர்வு தாமதம் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட வேண்டும். அல்லது மறுத்தேர்வு வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags :