39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு.

by Staff / 28-09-2025 09:56:41am
 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது  வழக்குப்பதிவு.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீதும் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் விஜய் பரப்புரையில் நேற்று 39 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு.

Share via