பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜய்குமார் விலகல் 

by Editor / 24-07-2021 06:18:03pm
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜய்குமார் விலகல் 

 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜய்குமார் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் வனிதா விஜய்குமார் கூறியதாவது:
ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது என் குடும்பத்தினராக அல்லது யாராக இருந்தாலும். இது இந்த உலகத்துக்கே தெரியும்.


பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து விஜய் தொலைக்காட்சி என் குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு எனப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். இருவர் தரப்பிலும் பரஸ்பரம் மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும். ஆனால் பணியிடத்தில் தொழில்முறையில்லாத நெறிமுறையற்ற நடத்தையை ஏற்றுகொள்ள முடியாது.

ஆணவத்தால் என் வளர்ச்சியைத் தாங்க முடியாத ஒருவர் எனக்குத் தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி, மோசமாக நடத்தினார். பணியிடங்களில் ஆண்கள் மட்டும் பெண்களை மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடந்துகொள்கிறார்கள். எங்கள் வாய்ப்புகளை அழிக்கிறார்கள். என்னைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் என்னைப் பார்க்கலாம்.


கடுமையாக உழைத்து முன்னேறிய மூத்த நபர், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதைப் பார்க்கவும் வேதனையாக உள்ளது. குடும்பம், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும் மூன்று குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள் சக பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுடைய வாழ்க்கையை மோசமாக மாற்றக்கூடாது.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடைபெறுவது வருத்தம் தான். சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். என்னால் நீங்கள் நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது. நீங்கள் அருமையான ஜோடி, என் முடிவுக்குத் தொழில்முறையில் ஆதரவு அளித்தீர்கள் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via