சேவியர் குமார் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய சீமான்

by Staff / 26-01-2024 12:58:36pm
சேவியர் குமார் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய சீமான்

கன்னியாகுமரியில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசுப் போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின்இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, கட்சி உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்தேன். கொலையாளிகளைக் கைது செய்யாமல் நாதகவினர் மீது அடக்குமுறைகளை ஏவி வரும் திமுக அரசைக் கண்டித்து இன்று நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்“ என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via