குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.இன்று குகேஷை பிரதமர் மோடி அவரது அலுவலக இல்லத்திற்கு நேரில் அழைத்து கலந்துரையாடி குகேஷை பாராட்டி செஸ் போர்டு ஒன்றையும் பரிசாக அளித்தார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியது , குகேஷை நேரில் அழைத்து சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன்.அவரது உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவரது பெற்றோர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
Tags : குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு.