தகராறை தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக்குத்து

by Staff / 10-02-2023 01:50:58pm
தகராறை தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக்குத்து

ஆலந்துார், கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன், 32. புதுப்பேட்டை ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர். இவர் நேற்று, தன் மைத்துனரான வாசு என்பவருடன், பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, வாசுவின் நண்பர் அஜ்மல் என்பவர் மொபைல் போன் வாயிலாக அழைத்து, கண்ணன் காலனி சுடுகாடு அருகே தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாக தகவல் தெரிவித்தார். விஜயனும், வாசுவும் அங்கு விரைந்தனர். அங்கு, அஜ்மலை அடித்த எட்டு பேர் கும்பலை தட்டிக் கேட்டனர்.இதில், ஆத்திரமடைந்த அந்த கும்பல், இருவரையும் சரமாரியாக தாக்கி தப்பியது. இதில், விஜயனுக்கு கத்திக்குத்து விழுந்தது. அக்கம் பக்கத்தினர் விஜயனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவர் நெற்றியில் ஐந்து தையல்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் படி, மவுன்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via